திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மொத் தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 20ம் தேதி முதல் அந்தந்த தொகுதியில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனு தாக்கல் செய்தனர். நேற்று 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். அந்தவகையில் திருச்சி எம்.பி. தொகுதியில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 48 வேட்பு மனுக்கள் பெறப் பட்டுள்ளது. அதில் நேற்று மட்டும் 29 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. ஒரே வேட்பாளர் இரண்டு வேட்பு மனுக்களும் மாற்று வேட்பாளர் மனுவும் வழங்கியுள்ளனர். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(28-03-2024) நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாதவர்கள் தங்களது விருப்ப மனுக்களை 30ம் தேதி திரும்ப பெறலாம்.

Prev Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.