Rock Fort Times
Online News

சென்னை புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி பெங்களூரில் சிக்கினார்…

பெங்களூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி ( வயது 32). சென்னையில் வேலை பார்த்து வந்தார். இவர் சென்னையில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து  நகை திருடியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வழக்கமான கைதிகள் சரிபார்ப்பின்போது ஜெயந்தி சிறையில் இருந்து தப்பியது தெரியவந்தது. சிசிடிவியை ஆய்வு செய்ததில் பார்வையாளர்கள் அறை அருகே இருந்த நுழைவு வாயில் வழியாக ஜெயந்தி தப்பி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து தப்பிய ஜெயந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்