Rock Fort Times
Online News

கரூர் பேருந்து நிலையம் அருகே மது போதையில் ரகளை செய்த பெண்…! ( வீடியோ இணைப்பு )

கரூர் பேருந்து நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மதுபோதையில் சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரிடம் விசாரிக்க சென்றவர்களை சகட்டு மேனிக்கு வசை பாடினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் தாங்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் என்பதும், ஒருவர் அவரிடம் ரூ.5 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி சென்றதாகவும், அந்த பணத்தை மீட்டு தரக்கோரி ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அந்தப் பெண் மது போதையில் இருந்ததால் வேறு ஏதும் அசம்பாவித சம்பவம் நடைபெறா வண்ணம் அந்த பெண்ணை கரூர் அனைத்து மகளிர் போலீசார் அழைத்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்