Rock Fort Times
Online News

திருச்சி புத்தூரில் போதை மார்க்கெட் விற்பனை! போலீசை கண்டதும் தெறித்து ஓடிய வாலிபர்கள்..!- ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு !

திருச்சி,புத்தூர் வண்ணாரப்பேட்டை அருகே அரசு மருத்துவமனை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அங்கிருந்த வாலிபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவ்வாலிபர்கள் புத்தூர் மேல வண்ணாரபேட்டையை சேர்ந்த ரிஷிகேஷ், உறையூர், காவல்கார தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் மற்றும் கீழ வண்ணாரபேட்டையை சேர்ந்த ரெக்ஸ் டேனியல் என்பதும், அவர்கள் போதை மாத்திரை வைத்திருந்ததும் தெரிந்தது. போலீசாரை கண்டது மூன்று வாலிபர்களில் இருவர் தப்பி ஓடி விட்டனர். மாட்டிக்கொண்ட ரிஷிகேசை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மற்ற இருவரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து 12 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்