Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 1 முதல் 7 வார்டுகளுக்கு ஒரு நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம்…!

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண் 1 முதல் 7 வரை உள்ள பகுதி மக்களுக்கு காலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் இருவேளை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், மேற்கண்ட வார்டுகளுக்கு தொடர்ந்து இருவேளை
குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சீர்செய்யும் வரை, வார்டு எண் 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஒருவேளை மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்