Rock Fort Times
Online News

ரூ.89 லட்சம் திட்ட மதிப்பீட்டில் லால்குடி கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம்…! (வீடியோ இணைப்பு)

பருவ மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் பயிர்கள் சேதமடைவதை தடுக்கும் பொருட்டு 2025-26 தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் டெல்டா பகுதிகளில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், லால்குடி ஆற்று பாதுகாப்பு கோட்டத்திற்கு உட்பட்ட பூவாளூர் அருகே செல்லும் கூழையாற்றில் 89 லட்சம் ரூபாய் மதிப்பில் 4.5 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பூவாளூர் முதல் காட்டூர் வரை நடைபெறும் இந்த பணியில் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு தூர் வாரும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், இடைப்பட்ட பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளப்பெருக்கு கால அபாயங்களில் இருந்து பாதுகாக்கப்படும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்