இந்திய முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகப்படுத்துவதற்கும், புதிதாக மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று ( 09.10.2023 ) காலை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு திருச்சி மாவட்ட திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மண்டல மாணவரணி செயலாளர் அறிவுச்சுடர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் வழக்கறிஞா் பூவை.புலிகேசி ஆர்ப்பாட்டத்தை விளக்கி கண்டன உரையாற்றினார். இதில் மாநகர தலைவர் துரைசாமி, காட்டூர் சங்கிலிமுத்து, விடுதலை செல்வம், சோமரசம் பேட்டை ராஜசேகர், பீமநகர் பகுதி செயலாளர் முபராக், மாளிகை திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் மகாமணி, அமுதா, மணப்பாறை ஒன்றிய தலைவர் பாலமுருகன், மாநகர மகளிர் அமைப்பாளர் பேபி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, தில்லைநகர் பகுதி தலைவர் ராமதாஸ், கல்பாக்கம் ராமச்சந்திரன், பெல் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், நடராசன், திருவெறும்பூர் இளங்கோவன் ஆகியோா் கலந்து கொண்டனா். நிறைவாக மாவட்ட மாணவரணி செயலாளர் கருப்பு கோகுல் நன்றி கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.