Rock Fort Times
Online News

வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை திருட்டு…!

மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு...

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் மேலத்தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி அமுதா. இவர் நேற்று காலை 100 நாள் வேலைக்காக சென்று விட்டார். ரவி அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு  சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு லாக்கரில் வைத்திருந்த 25 பவுன் நகை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் ரவி புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்