ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள பெரியார் சிலையை கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி சிலர் உடைத்து சேதப்படுத்தினர். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் அக்கட்சியை சேர்ந்த 8 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.