Rock Fort Times
Online News

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான  திமுக வேட்பாளர் அறிவிப்பு…! 

தமிழகத்தில்  கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், 51 வார்டுகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பின்னர் நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து இவர் மீது, திமுக கவுன்சிலர்கள் பலர் தொடர் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டும், மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் தீர்மானம் கைவிடப்பட்டது. இதையடுத்து மேயராக இருந்த சரவணன்  தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை(05-08-2024) நடைபெறும் நிலையில் திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்கள்  கே.என்.நேரு,   தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.  நாளை காலை 10.30 மணிக்கு மேயர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது.  இந்நிலையில் திருநெல்வேலி மேயர் தேர்தலில் போட்டியிட பல மாமன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில், மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்