சேலத்தில் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் தி.மு.க.இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். மாநாட்டை முன்னிட்டு 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுப்போம். ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி 85 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம்.
அதனை, மாநாட்டின் போது திமுக தலைவரிடம் ஒப்படைப்போம். பின்னர், நேரடியாக நானே குடியரசு தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன்.
ராமர் கோவில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கு திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால் தான் தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லை என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.