திருச்சி, மிளகுபாறை, ஆதி திராவிடர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது40). இவர் கே.கே.நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் ( ஏப் 18ந் தேதி ) மதுகுடிக்க தன் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், வேலைக்கு சென்ற ராஜா அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கே.கேநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.