Rock Fort Times
Online News

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி(72), சில நாட்களுக்கு முன்பு சுவாச தொற்று பிரச்னையால் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் சேர்ந்த சீதாராம் யெச்சூரிக்கு உடல்நிலை மேலும் மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  இருந்தும் போதிய முன்னேற்றம் இல்லாததால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செயற்கை சுவாச உதவியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவர், இன்று(12-09-2024) சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள், பிற கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.  1952ல் சென்னையில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. ஆனால் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். ஆந்திரா, டில்லியில் பள்ளிப்படிப்பை முடித்தார். டில்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.  1974-ல் மாணவர் கூட்டமைப்பில் இணைந்தார்.1975-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து பல்வேறு பதவிகளை வகித்த அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். 2005 முதல் 2017 வரை ராஜ்யசபா எம்பி ஆக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்