திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மார்ச் 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை வழக்குகள் மீதான சமரச தீர்வு முகாம்…!
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மார்ச் 3-ம் தேதி முதல் 8ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம்.கிறிஸ்டோபர் கூறுகையில், தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு ஆகியவற்றின் அறிவுரையைப் பெற்று நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வங்கி வழக்குகள், மோட்டார் வாகன இழப்பீட்டு வழக்குகள், நீதிமன்ற நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், சமரசம் செய்யக் கூடிய குற்றவியல் வழக்குகள், திருமணம் தொடர்பான வழக்குகள், காசோலை மோசடி வழக்கு, தொழிலாளர் நலத் தீர்ப்பாயத்தில் நஷ்டஈடு கோரிய வழக்குகள் தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காணப்படும். மேலும், மார்ச் 3 முதல் 7ஆம் தேதி வரை இத்தகைய வழக்குகள் தொடர்பாக சுமூக பேச்சுவார்த்தை நடத்திட நீதிபதிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சுமூகத் தீர்வு காண விரும்பும் வழக்காடிகள் தங்களது வழக்கறிஞருடன் தொடர்புடைய நீதிமன்றத்தை அணுகலாம். மார்ச் 4ம் தேதி வங்கிகளில் கடன் வசூல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்காக ஒரு சிறப்பு அமர்வும் நடைபெறுகிறது. இதையும் வழக்காடிகளும், வழக்குரைஞர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.