Rock Fort Times
Online News

பறவைகளை வேட்டையாடியதாக புகார்: ஊர்க்காவல் படை வீரரிடம் துப்பாக்கி பறிமுதல்…!

திருச்சி  ஸ்ரீரங்கம்  கீழவாசலைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் அசோக். ஊர்க் காவல் படை வீரர். இவரது நண்பர் பாண்டியன். இவர்கள் இருவரும் ஏர்கன்னுடன் புறா, முயல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தியதுடன், அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர்கள் , பறவைகள் மற்றும் முயல் வேட்டையில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்