Rock Fort Times
Online News

திருச்சியில் இரு தரப்பினர் இடையே மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு, 5 பேர் கைது…!

திருச்சி, சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 36). இவருக்கும், துரைசாமிபுரம் டார்வினுக்கும் இடையே யார் பெரியவர் என்பதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் பாலமுருகன், சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் நாக காளியம்மன் கோவில் பகுதியில் தனது நண்பர் கிஷோர் ,பிரவீன், ஆரோக்கியராஜ், பாண்டி, ரபேல் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டார்வின், வரகனேரி நித்தியானந்தபுரம் ஸ்ரீராம்(24), பொன்மலைப்பட்டி புதுடீசல் காலனி சி பிளாக் பகுதியைச் சேர்ந்த ஜான் பாஸ்கோ (19 ) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து கிஷோரை தாக்க முயன்றனர். இதை பாலமுருகன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த டார்வின் தரப்பினர், பாலமுருகன், பிரவீன், ரபேல் ஆகியோரை அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கினர்.இதில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக பாலமுருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீராம், ஜான் பாஸ்கோ, டார்வின் மற்றும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடமிருந்து 2 அரிவாள், மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. கைதான மேற்கண்ட 5 பேர் மீதும் ஸ்ரீரங்கம் மற்றும் பாலக்கரை போலீசார் தனியார் நிறுவன அதிகாரியின் மோட்டார் சைக்கிளை மிரட்டி பறித்ததாகவும், ஐ.டி ஊழியரை மிரட்டி செல்போனை பறித்து சென்றதாகவும் இரண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்