Rock Fort Times
Online News

கோவிந்தா… கோவிந்தா… கோஷம் விண்ணதிர திருச்சி உத்தமர் கோவில் தேரோட்டம் கோலாகலம்…!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள மும்மூர்த்திகள் ஸ்தலமான உத்தமர்கோவில் சித்திரை தேர் திருவிழா மே 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அனுதினமும் புருஷோத்தம பெருமாள் சூரிய பிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட, சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு கண்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் இன்று(10-05-2025) விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு புருஷேத்தம பெருமாள் உபய நாச்சியார்களுடன் புறப்பாடு கண்டு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்த தேர், மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்