Rock Fort Times
Online News

திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்…! * கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்

திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 2025-2026-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. இணைய வழி விண்ணப்பதிவு 27.05.2025 (செவ்வாய்கிழமை) வரை இக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும். எனவே, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் இக்கல்லூரியின் “இ- சேவை” மையத்தில் உள்ள சேர்க்கை உதவி மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என இக்கல்லூரி முதல்வர் முனைவர்.க. அங்கம்மாள் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு இக்கல்லூரியில் உதவி மையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்