Rock Fort Times
Online News

ரமலான் பண்டிகை நாளை கொண்டாட்டம்- மாவட்ட அரசு ஹாஜி அறிவிப்பு…!

திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்ட பகுதிகளில் ஷவ்வால் பிறை தென்படாத காரணத்தால் நாளை (வியாழக்கிழமை) ரமலான் பண்டிகை கொண்டாப்படும் என ஹிலால் கமிட்டித் தலைவரும், மாவட்ட அரசு ஹாஜியுமான க. ஜலீல்சுல்தான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில் ஷ்வ்வால் பிறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஹிலால் கமிட்டித் தலைவரும். மாவட்ட அரசு ஹாஜியுமான க.ஜலீல் சுல்தான் தலைமை வகித்தார். ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள் ஏ. முகமது ரூஹில்ஹக், நௌஷாத் என்கிற பஷிர்பாய், ஏகே. உசேன், எம்.ஷேக்தாவூத் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை ஷவ்வால் பிறை தென்படாத காரணத்தால், திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக்கிழமை முதல்பிறை ஆரம்பமாகும். எனவே, அன்றைய தினம் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது என மாவட்ட அரசு ஹாஜி தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்