தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், புதிய அரசியல் நகர்வாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். சமீப காலமாக அதிமுக தலைமைக்கும் அவருக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள கடும் அதிருப்தியே விஜயபாஸ்கரின் ராஜினாமா முடிவுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.