திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் காஜா. நேற்று இரவு அவரது கடைக்கு வந்த ஒரு சிறுவனுக்கு காஜா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அங்கிருந்த சிலர் அந்த சிறுவனை மீட்டு காஜாவை கண்டித்ததோடு அவரை கடைக்குள் வைத்து பூட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இட த்திற்கு வந்த போலீசார் காஜாவை மீட்க முயன்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். அப்போது இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து காஜாவை மீட்டு காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.