Rock Fort Times
Online News

தொழிலதிபர் அருண்நேரு பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்…

தி.மு.க.பிரமுகர்.எஸ்.முருகவேல் ஏற்பாடு..

திமுக முதன்மை செயலாளரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அன்னதானம், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவற்றை தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திருச்சி மத்திய மாவட்ட திமுக ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளரும், இ2ஜி இன்ஜினியரிங் சர்வீஸ் நிர்வாக இயக்குனருமான பெருவை எஸ்.முருகவேல் திருச்சி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தார். தில்லைநகர் 6வது கிராஸில் உள்ள இவரது அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமில் சுமார் 65க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்த தானம் அளித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்