Rock Fort Times
Online News

திருவெறும்பூாில் மனைவி மற்றும் மாமியாரை தாக்கியவா் கைது..

திருச்சி திருவெறும்பூர் எழில் நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் ரஞ்சனா வயது (39) .இவருக்கும் திருச்சி சங்கிலியாண்ட புரம் தெரசம்மாள் தெருவை சேர்ந்த சரவணகுமார் வயது (45) என்பவருக்கும் கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் சில மாதமாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சரவணகுமார் தன் மனைவி ரஞ்சினாவை நடத்தையில் சந்தேகப்பட்டு உள்ளார். இதனால் ரஞ்சினாவிற்கும் சரவணகுமாருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக ரஞ்சினா தனது தாய் வீட்டிற்க்கு சென்று விட்டார். இந்த நிலையில் சரவணகுமார் ரஞ்சனாவின் தாய் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ரஞ்சினாவையும் அவரது தாயையும் தாக்கி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து ரஞ்சினா திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்