தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் மலர்விழி ஐ.ஏ. எஸ்.. இவர் அங்கு கலெக்டராக இருந்தபோது, வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கி ரூ.1.31 கோடிக்கு முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதோடு , இந்த விஷயத்தில் 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று ( 06.06.2023 ) திடீரென சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் உள்ள மலர்விழி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மலர்விழி தற்போது சென்னை அறிவியல் நகர துணை தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.