திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள ஈஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அங்கு ரத்தினம் (வயது 70). சம்பவத்தன்று இவர் குளித்தலையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்கு அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், அங்குரத்தினம் பையில் வைத்திருந்த தங்க நகைகளை நைசாக திருடிக் கொண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விட்டார். அந்தப் பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்தை அடைந்ததும் பையில் வைத்திருந்த நகைகளை காணாமல் அங்கு ரத்தினம் திடுக்கிட்டார். அந்த பையில் சுமார் 29 பவுன் தங்க நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்குரத்தினம் கோட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் பஸ்ஸில் மூதாட்டி இடம் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.