திருச்சி-கரூர் சாலை குடமுருட்டி செக் போஸ்ட் அருகே அசாருதீன் என்பவர் விளையாட்டு வீரர்களுக்கான டீ சர்ட், பேண்ட், உள்ளிட்ட ஆடைகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று(25-07-2024) மாலை அந்த கடையின் விளம்பர பலகை காற்றின் காரணமாக கீழே விழும் நிலையில் இருந்துள்ளது. அதனை கடை ஊழியர்களான அசோக் ( 42 ), கோபி (48) ஆகிய இருவரும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விளம்பர பலகை உயர் மின்னழுத்த கம்பியில் உரசியுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்ததில் விளம்பர பதாகையை பிடித்திருந்த அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபி திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த அசோக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed.