திருச்சி குமரன் நகர் 15 வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 70). சம்பவதன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 19 பவுன் நகைகள், 200 கிராம் வெள்ளி பாத்திரங்கள், 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். மறுநாள் வீடு திரும்பிய தியாகராஜன்,
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜன் வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 973
Comments are closed, but trackbacks and pingbacks are open.