திண்டுக்கல் மாவட்டம் மாவூத்துப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் சந்திரபாண்டியன். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 4-வது முறையாக வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி வகித்து வந்தார். இந்தநிலையில், சந்திரபாண்டியன் லிங்கவாடி பகுதியிலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக மதுரையை அடுத்த பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியது. படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரபாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பாலமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மகும்பலை பாலமேடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.