Rock Fort Times
Online News

காந்தி ஜெயந்தி நாளில் விடுமுறை அளிக்காத 106 நிறுவனங்கள் மீது நடவடிக்கை….

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று ( 02.10.2023 ) பொது விடுமுறை நாள் ஆகும். ஆனால், சில நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் தொடர்ந்து செயல்பட்டன. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை தொழிலாளர் ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் க. ஜெயபாலன், இணைஆணையர் ஆ. திவ்வியநாதன் ஆகியோர் அறிவுறுத்தினர். அதன்படி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) ஏ. வெங்கடேசன் தலைமையில் துணை மற்றும் உதவி ஆய்வாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 147 நிறுவனங்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன. இதில் 106 நிறுவனங்களில் விடுமுறை அளிக்காதது தெரியவந்தது. மேலும், தேசிய விடுமுறை நாளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காவிட்டால் இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும் என விதியும் உள்ளது. இவற்றைக் கடைபிடிக்காத வகையில் 106 நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்