Rock Fort Times
Online News

லால்குடி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சதுர்ப்பகம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 23). இவர்களுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த மனோன்மணி என்ற பெண்ணிற்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அந்தப் பெண், கோவிந்தராஜ் மீது லால்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டதால் கோவிந்தராஜ் மன அழுத்தத்திற்கு ஆளானார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்