Rock Fort Times
Online News

திருச்சியில் பரிதாபம் மாடியில் இருந்து குதித்து ஒருவர் சாவு போலீசார் விசாரணை…

திருச்சி, கருமண்டபம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 44). இவருக்கு திருமணமாகி மனைவி,இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
செந்தில் மலேசியாவில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் அவருடைய தாய் கடந்த வாரம் உடல்நல குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதை தொடர்ந்து அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செந்தில் மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் இந்நிலையில் மொட்டை மாடியில் தனது நண்பர் ஒருவருடன் இரவு தூங்கிக் கொண்டிருந்த செந்தில், திடீரென்று நள்ளிரவு மொட்டை மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து குடும்பத்தினர் உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் இறந்தது எப்படி ? என்ன காரணத்துக்காக இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்