தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நாலுமாவடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் பெங்களூருக்கு சென்று செல்போன் கடைக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்கி விட்டு தூத்துக்குடி வழியாக ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முக்காணி பகுதியில் சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் மணிகண்டன் ஓட்டி வந்த கார் புகுந்தது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த நட்டார் சாந்தி, பார்வதி, அமராவதி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சண்முகத்தாய் என்பவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கார் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.