Rock Fort Times
Online News

மதுரை மாநாட்டில் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று ( 08.07.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் , நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி பி.எச்.இ.எல் வளாகத்தில் நிறுவப்பட்ட முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். சிலையை  கடந்த 6ம் தேதி  திறந்து வைத்து சிறப்புரையாற்றிய முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள், குறிப்பாக அண்ணா தொழிற்சங்கத்திற்கும் திருவெறும்பூர், மணப்பாறை மற்றும் லால்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கட்சியினருக்கு நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்து கொள்வது, அடுத்த மாதம் ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பாக பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் சென்று கலந்து கொள்வது. கட்சி நிர்வாகிகள் அயராது உழைத்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்