திருச்சியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் பொருட்டு திருச்சி ஜங்ஷன் அருகே மேம்பாலம் கட்டப்பட்டது. மன்னார்புரம், கிராப்பட்டி (மதுரை சாலைகள்), கருமண்டபம் (திண்டுக்கல் சாலை), மத்திய பஸ் நிலையம், ரெயில்வே ஜங்ஷன் பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி இடம் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்ததால் பாலம் முழுமை பெறாமல் இருந்தது. பின்னர் ராணுவ ஒப்புதல் பெற்று முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த மே மாதம் 29-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

இந்த பாலம் ஒரு வழி பாதையாகவே இருந்தது. இதனை இருவழிப் பாதையாக மாற்ற திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்தியபிரியா ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மத்திய பஸ்நிலையத்திலிருந்து இரு வழிப்பாதையாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று ( 05.07.2023 ) முதல் இருவழி பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. போக்குவரத்தை கமிஷனர் சத்திய பிரியா தொடங்கி வைத்தாா். அப்போது உதவி கமிஷனர் நிக்சன், கண்டோன்மென்ட் உதவி கமிஷனர் கென்னடி, கண்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் சிவகுமாா் உள்ளிட்ட அதிகாாிகள் உடன் இருந்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.