Rock Fort Times
Online News

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு..  

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நம்பர் 1 டோல்கேட் நெய்குப்பை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 40). இவர் தனியார் மருத்துவமனை கேண்டினில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து, நேற்று ( 16.06.2023 ) இரவு  சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி பகுதியை சேர்ந்த விஜயலெட்சுமி என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதில் நிலைதடுமாறி 2 பெண்களும் இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்தனர். இச்சம்பவம் குறித்து நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்