முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவுக்கு புதிதாக ரூ.12 லட்சம் மதிப்பிலான நவீன ஸ்கேனர் கருவி வழங்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வருகைதரும் நேரங்களில் அல்லது முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு இந்த கருவியை எளிதில் எடுத்துச் செல்ல முடியும். திருச்சி காவல் ஆணையரகத்தில் நேற்று ( 16.06.2023 ) நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த தருவியை திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்புப் பிரிவுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் எம் . சத்தியபிரியா ஐபிஎஸ் வழங்கினார். இந்த கருவியின் மூலம் வெடிகுண்டுகள் மட்டுமின்றி அரசால் தடைசெய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற பொருட்களையும் கண்டறிய முடியும். ரயில், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் இவற்றைக்கொண்டு சோதனை மேற்கொள்ள முடியும்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.