தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தங்களது தாயார் சௌமியா அன்புமணிக்காக அவரது மகள்கள் சங்கமித்ரா மற்றும் சம்யுத்ரா இருவரும் தருமபுரி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தொகுதியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அடங்கிய நோட்டீஸ்களை அவர்கள் வீடு வீடாக வழங்கி ஆதரவு திரட்டினர்.

Comments are closed.