Rock Fort Times
Online News

தமிழக அரசின் தலைமைச் செயலராக சாய்குமார், லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக சந்தீப் மிட்டல் பொறுப்பேற்பு…!

தமிழகத்தில் ஏப்​.23-ம் தேதி வாக்​குப்பதிவு நடை​பெறுகிறது. தேர்​தல் நடைபெறும் மாநிலங்​களில் 3 ஆண்​டு​களாக ஒரே இடத்​தில் பணி​யாற்​றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் மற்​றும் உயர் பொறுப்​பு​களில் இருப்​பவர்​கள், இதர அதி​காரி​களை மாற்ற இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. அதன்படி, தமிழகத் தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், லஞ்ச ஒழிப்​புத் துறை டிஜிபி டேவிட்​சன் தேவாசிர்​வாதம் ஆகியோரை தேர்​தல் ஆணை​யம் நேற்று திடீரென மாற்றி உத்தரவிட்டது. புதிய தலை​மைச் செயல​ராக எம்​.​சாய்​கு​மார், லஞ்ச ஒழிப்​புத் துறை டிஜிபி​யாக சந்​தீப் மிட்​டல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழக பிரி​வில் 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் அதி காரி​யான டாக்​டர் எம்​.​சாய்​கு​மார், பொதுப் பணித்​துறை செயலர், மின் வாரி​யத் தலை​வர், தமிழ்​நாடு தொழில் முதலீட்​டுக் கழகத் தலை​வர், செய்​தித்​தாள் காகித நிறு​வனத் தலை​வர் போன்ற முக்​கியப் பொறுப்​பு​களை வகித்​துள்​ளார். கடந்த அதி​முக ஆட்​சி​யில் முதல்​வ​ராக பழனி​சாமி இருந்த போது, முதல்​வரின் செயலர்​களில் முதன்​மை​யானவ​ராக சாய்​கு​மார் இருந்​தார்.

சந்​தீப் மிட்​டல்:

கடந்த 1995-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதி​காரி​யான சந்​தீப் மிட்​டல், சைபர் பாது​காப்பு, குற்​ற​வியல் புல​னாய்​வில் நிபுணத்​து​வம் பெற்​றவர். தமிழகத்​தில் சைபர் குற்​றத் தடுப்​பு, டிஜிட்​டல் விசா​ரணை, சைபர் ஆளுமை கட்டமைப்புகளை வலுப்​படுத்​தி​ய​தில்​ முக்​கிய பங்​​காற்​றி​யுள்​ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்