திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ. பா.பரணிகுமார் இல்ல திருமண விழா… முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 28-ம் தேதி நடக்கிறது!
திருச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் மா.பாலகிருஷ்ணன். இவரது மகன் பா.பரணிகுமார். இவர், திருச்சி 1-வது சட்டமன்ற தொகுதியில், கடந்த 1996 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவர். மு.க.ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பணியாற்றியபோது, அன்பில் பொய்யாமொழியுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பயணித்தவர் பா.பரணிக்குமார். அந்த காலகட்டங்களில் மு.க.ஸ்டாலின் கார் ஓட்டும் சாரதியாகவும் செயல்பட்டவர். இந்நிலையில் பா.பரணிகுமார்- மகாலட்சுமி தம்பதியரின் மகன் டாக்டர் ஆதித்யா பாலா பரணி குமாருக்கும், சென்னை கே.மோகன்- சாந்தகுமாரி ஆகியோரது மகள் டாக்டர் எம்.மீனாட்சிக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் வருகிற 28ம் தேதி (புதன்கிழமை) காலை 9-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் நடக்கிறது. தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி ஆகியோர் வரவேற்புரை ஆற்றுகிறார்கள். திருமண விழாவில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள் முன்னாள் உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டக் கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை பரணிகுமார் மற்றும் கே.மோகன் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Comments are closed.