Rock Fort Times
Online News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிச.9ம் தேதிக்கு ஒத்திவைப்பு…!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான அவமதிப்பு வழக்கில், இன்று (டிச.,05) காலை அரசின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி சுவாமிநாதன் ஒத்திவைத்தார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிகுமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று (டிச.,05) காலை 10.45 மணிக்கு மீண்டும் ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமி நாதன், வழக்கு விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்