முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிக்கை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் நாளை(டிச.5) அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்கவும், சட்டமன்ற உறுப்பினர் பி. தங்கமணி அறிவுறுத்தலின் படியும் அதிமுகவுக்கும், தமிழக மக்களுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்து தவவாழ்வு வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 9- வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் எனது தலைமையில் நாளை(5.12.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலை அருகில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு நிர்வாகிகள் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.