Rock Fort Times
Online News

வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை…!

இந்திய கடல் வர்த்தகத்தின் தந்தை, சுதந்திரப் போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அண்ணாரின் முழு உருவசிலைக்கு இன்று (நவ.18) தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் வி.ஜே.செந்தில் பிள்ளை மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்