Rock Fort Times
Online News

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் வழங்கினர்!

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. அதன்படி, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட தென்னூர் உழவர் சந்தை மைதானம் அருகே நடைபெற்ற அரசு விழாவில், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பயனாளிகளுக்கு
இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் வழங்கினர். மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் லி.மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்