Rock Fort Times
Online News

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கம்: குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் நேரில் அழைப்பு !

புதுடில்லியில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். சென்னை கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடி செலவில், 1000 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திடவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருவதாக உறுதியளித்துள்ளார். அதன்படி, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார். இதற்காக வரும் ஜூன் 5ம் தேதி திரௌபதி முர்மு தமிழகம் வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்