அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர் மனோகரன். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து மனோகரன் வகித்த திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கு முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் திருச்சி மாநகராட்சி 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதனை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.