Rock Fort Times
Online News

கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய விலக்கு- ஐகோர்ட் அனுமதி!

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் நீதிமன்ற பணியின் போது கருப்பு கவுன் அணிய விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பார் அசோசியேசன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் ஆண்டுதோறும் ஏப்ரல் 1முதல் ஜூன் 30 வரை நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய விலக்களித்து உத்தரவிட்டுள்ளது. கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை பட்டை அணிவது கட்டாயம் என வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்