ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம் .அதன்படி இன்று காலை மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கை பொருட்கள் எண்ணிக்கை தொடங்கியது .கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன், மேலாளர் தமிழ் செல்வி, கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், கோபாலகிருஷ்ணன் , மீனாட்சி, சரண்யா, வெங்கடேசன், துணை மேலாளர் சண்முகவடிவு, ஆய்வாளர் மங்கையர் செல்வி ஆகியோர் முன்னிலையில் நடந்த எண்ணிக்கை பணியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர் .