Rock Fort Times
Online News

திருச்சி பொன்மலை  சாக்கடையில் வாலிபர் பிணம்! போலீசார் விசாரணை.

திருச்சி பொன்மலையில் மதுபான கடை அருகே சாக்கடையில் வாலிபர் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-  திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38) .இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்த  நிலையில் குடிப்பழக்கத்திற்கு  ஆளானார்.  அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் நேற்று இரவு மது அருந்திவிட்டு அருகில் உள்ள சாக்கடை அருகே ஒரு வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதன் கழிவு நீர் சாக்கடைக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் லோகநாதன் பிணமாக கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் ?என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்