Rock Fort Times
Online News

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!

மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 முக்கிய தளர்​வு​களை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, பெண்​களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை” என்ற பெயரில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த தொகையை பெறுவதற்கு சில நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டன. அதில், நான்கு சக்கர வாக​னம் (கார், ஜீப் போன்​றவை) வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​கள் திட்​டத்​துக்கு தகு​தி​யற்​றவர்​களாக கருதப்​பட்​டனர். அதேபோல வருமான வரி செலுத்துபவர்கள், ஏற்கனவே ஓய்வூதியம் பெறுவோர் போன்றோருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. அரசின் நிபந்​தனை​களுக்​குட்​பட்டு தகு​தி​யுள்ள பெண்​களின் விண்ணப்பங்களும் நிராகரிக்​கப்​பட்​ட​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவர், உரிமைத்தொகை கிடைக்க பெறாதவர்கள் மற்​றும் புதி​தாக ரேஷன் அட்டை பெற்​றவர்​கள் அனை​வரும் ஜூலை 15-ம் தேதி முதல் நடை​பெறும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ சிறப்பு முகாம்​களில் விண்ணப்பிக்கலாம், அதில் தகு​தி​யான பெண்​களுக்கு ஆகஸ்ட் அல்​லது செப்​டம்​பரில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்​கப்​படும் என தெரிவித்தார். இந்தநிலை​யில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்​டத்​தில் 3 முக்​கிய தளர்​வு​களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்​படி, அரசுத்​துறை​களில் சிறப்பு கால​முறை ஊதி​யம் பெற்​று, தற்​போது ஓய்​வூ​தி​யம் பெறு​வோர் குடும்​பங்​களைச் சேர்ந்த ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் அல்​லாத பெண்​கள் திட்​டத்​தில் சேர விண்​ணப்​பிக்​கலாம். அரசு மூல​மாக மானி​யம் பெற்று 4 சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​களும் தகு​தி​யானவர்​கள். மேலும் இந்​தி​ரா​காந்தி தேசிய விதவை ஓய்​வூ​தி​யம், ஆதர​வற்ற விதவை​கள் ஓய்​வூ​தி​யம் பெறு​வோர் குடும்​பங்​களைச் சேர்ந்த ஓய்​வூ​தி​யம் பெறாத பெண்​களும் விண்​ணப்​பிக்​கலாம். கணவ​ரால் கைவிடப்​பட்ட 50 வயதுக்கு மேலாகி​யும் திரு​மணம் ஆகாத பெண்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் பெறும் குடும்​பங்​களில் உள்ள மற்ற பெண்​கள் விண்​ணப்​பிக்​கத் தகுதி வாய்ந்​தவர்​கள் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பான அரசாணையை சிறப்பு திட்ட செய​லாக்​கத்​துறைச்​ செயலர்​ பிரதீப்​ யாதவ் பிறப்பித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்