Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள நூலகம், அறிவு சார் மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு திடீர் ஆய்வு…!

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 53, குதுப்பாபள்ளம் பகுதியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் சுமார் 200 மாணவ- மாணவிகள் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இம்மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர், மாணவ- மாணவிகளிடம் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் , ஆணையர் வே.சரவணன், மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வைரமணி, நகரப் பொறியாளர் சிவபாதம்,
மண்டல குழு தலைவர் துர்கா தேவி , உதவி ஆணையர் சண்முகம், மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்