திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 53, குதுப்பாபள்ளம் பகுதியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் சுமார் 200 மாணவ- மாணவிகள் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இம்மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர், மாணவ- மாணவிகளிடம் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் , ஆணையர் வே.சரவணன், மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வைரமணி, நகரப் பொறியாளர் சிவபாதம்,
மண்டல குழு தலைவர் துர்கா தேவி , உதவி ஆணையர் சண்முகம், மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed.